Posts

Showing posts from 2011
இதயம் என்னும் தோட்டத்தில் காதல் எனும் பயிர் வளர்த்தேன்...! பயிரும் செழிப்பானது என் இதய கண்ணீரில்...!
என்னவளே! உன் வரவுக்காக தினம் தினம் காத்திருக்கும் - எனக்கு உன் வரவுதான் வேண்டாம்... -ஆனால் உன் வார்த்தையையாவது தர இயலாதா?
இதயம் என்னும் கூட்டில் சிறிதாக அவள் பரிசங்களை சிறைப்படுத்தினேன்...! அவளே என் இதயம் என்பது தெரியாமல்...!
என்னிடம் பேசுவதற்காக யோசித்து வைத்திருந்த அத்தனை வார்த்தைகளையும் மறந்து… உடலுக்குள் மெல்லிய நடுக்கம் பிறக்க… உயிருக்குள் சில்லென்று புயல் அடிக்க… இதயம் நான்கு மடங்காய் துடிக்க… என்ன செய்வதென தெரியாமல்… ஒரு சுகமான பதற்றத்தோடு எனக்கு முன்னால் வந்து நிற்கிறாய் நமக்கான முதல் சந்திப்பில்…
Image
உண்மை சொல்ல கண்கள்..! பொய் சொல்ல பெண்கள்...! அதை நம்ப ஆண்கள்..! உண்மை சொன்ன கண்கள் சிறை அறையில்...! பொய் சொன்ன பெண்கள் மணவறையில்....! நம்பிய ஆண்கள் கல்லறையில்........!!!!!
உயிரற்ற என் உடலில் உயிராய் உட்புகுந்து உலவ விட்டிருக்கும் - அந்த உலக தேவைதை யார்? என்று எண்ணித் தவமிந்தேன்...! வரமும் கிடைத்தது...! - ஆனால் அவள் வரவுதான் கிடைக்கவில்லை...!
முகமூடி அணிந்தால் முகம்தான் தெரிந்திடுமா? கண்ணாடி பார்த்தால் அகம்தான் புலப்படுமா? சொன்னால் மட்டும் காதல் புரிந்திடுமா? சொல்லவில்லையென்றால் காதல் தான் செத்து விடுமா? காதல் நினைவிருந்தால் மட்டும் போதுமா? கண்ணில் கனவிருந்தால் தான் காதலா? நான் காதல் கொள்வது தான் தவறா? இல்லை என்னை காதல் கொள்ளும் பெண்தான் பாவமா? இவ்வாறு விடை தெரியாமல் விழிக்கிறேன்...! பாதை தெரியாமல் நடுவில் நின்று உழறுகிறேன்...!
உன்னை காதலிப்பதால் தான் நான் கவிதை எழுதி கொண்டிருப்பதாய் என எல்லோரும் சொல்கிறார்கள் நான் காதலிப்பதே ஒரு கவிதையை தான் என உணராமல்....

Just Feel it :-

நாள் முழுக்க பேசிக்கொண்டு பக்கத்திலேயே இருந்த பிறகும் விடைபெறும் சமயத்தில் என் கைகைளை இறுகப் பற்றிக்கொள்வாயே… அந்த ஒருநொடியில் ஒட்டுமொத்தமாய் கரைந்துபோனது இதுவரை கடந்த அத்தனை நிமிடங்களும் ! இன்னும் கொஞ்சநேரம் இப்படியே கையை பற்றிக்கொண்டு இருப்பாயா என மனம் ஏங்கினாலும்… “சரி நேரமாயிடுச்சு கிளம்பட்டுமா… “ என கேட்கும் என் பொய்யான உதடுகளை என்ன செய்ய ! ~பாலமுருகன்
நீ இமைக்கும் போது உன்னிடம் கண்ணாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த கண்கள்! நீ சுவாசிக்கும் போது உன்னிடம் காற்றாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த சுவாசம்! நீ பேசும் போது உன்னிடம் வார்த்தையாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த வார்த்தை! நீ உறங்கும் போது உன்னிடம் கனவாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த கனவு! நீ நினைக்கும் போது உன்னிடம் ஜீவனாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த ஜீவன்! நீ போகும் போது உன்னிடம் நிழலாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த நிழல்! நீ வாழும் போது உன்னிடம் வாழ்க்கையாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த வாழ்க்கை! ~பாலமுருகன்
மறந்து போன மாயம் என்னவோ..! என்னவளே---- உன் விழி கண்டு என் விழி முடாமல் உன்னை தேடிய--- நெஞ்சம் இங்கு உன் வருகின் நாளை எண்ணியே....
எனக்கு தெரியும் நீ விரும்புவது என்னை அல்ல என் கவிதைகளை என்று. ஆனால் உனக்குத் தெரியுமா? உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல நான் தான் என்று.. தபால்காரனுக்குக் கூட என் மீது இறக்கம் இருக்கிறது. எவர் வீட்டுக் கடிதத்தையாவது என் வீட்டில் போட்டு தற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான். நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய். எனக்கு வரவேண்டிய கடிதத்தை இன்னும் எழுதத் தொடங்காமல்........ எழுது எழுது.. எனக்கொரு கடிதம் எழுது.. என்னை நேசிக்கிறாய் என்றல்ல. நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்று.... ~பாலமுருகன்
உன் பார்வை என்னுள் கிறுக்கியதில் இருந்தே, எதை எதையோ கிறுக்குகிறேன் என் டைரியில்... அத்தனையும் உன்னைப் போல, அழகாகவே முகம் காட்டுகிறது காதல் எனும் கவிதையாய்.... ~பாலா
சிற்பியால் செதுக்கப்படும் கல்.. சிற்பமாகும் ஒருநாள்.. துன்பங்களால் செதுக்கப்படும் நமது வாழ்வும்.. சிறப்பு காணும் அந்த அழகிய சிற்பம் போல...!
ஒருநாள்.. உனைப் பார்த்தேன்.. மறுநாள்.. மனம் வியந்தேன். சிலநாள்.. ...இரசித்திருந்து.. பலநாள் விழித்திருந்தேன்..-நம் மணநாள் வேண்டுமென்று. மனதால் சிரித்திருந்தேன் – உன்திரு மணநாள் கேள்விப்பட்டேன்..-என் மரணநாள் தேடிநின்றேன்.. ~பாலமுருகன்
கவிதை சரியாக எழுத வராதபோது என்னுடன் இருந்தாள். கவிதை நன்றாக எழுத வந்ததும் ஏன்? எனைவிட்டு சென்றாள் . கவிஞனாக்க வேண்டும் என்பதற்காகவே சந்தித்துப் பிரிந்தாள் ~பாலா
உன்னை சுற்றும் நட்சத்திரங்களில் நானும் ஒருவன் தான்... ஆனால் ...... எனக்கு தெரிந்த ஒரே "நிலவு" நீ மட்டும் தான்...!!
உன் பார்வை என்னுள் கிறுக்கியதில் இருந்தே, எதை எதையோ கிறுக்குகிறேன் என் டைரியில்... அத்தனையும் உன்னைப் போல, அழகாகவே முகம் காட்டுகிறது காதல் எனும் கவிதையாய்....

உன் நினைவாள்...!

அன்பாய் கரம் பிடித்து மடியில் தலை சாய்த்து நீ முடி கோதும் போதினிலே உன் மொழி கேட்டு என் மொழி வாழ நம் உரையாடும் விளையாடல் மனம் காணும் ஓர் சுக நாடலே உன் முகம் காணும் கண நேரம் மனம் காணும் இதம் போதுமே... குழல் சூட நல் மலர் கொண்டு தினம் வந்து என் கரம் கொண்டு நான் சுடும் வரம் வேண்டுமே... உன் கரம் பற்றி நிலவோடு நடை போடும் சுகம் போதும் அகிலங்கள் துசாகுமே... விழியோடு விழி பேசும் மொழி காண மனம் நாளும் இனம் காணா தவிப்பாகும் இதை எழுத இயலாததே... உன் கோபம் நான் தணிக்க என் கோபம் நீ தணிக்க இது ஊடல் இளைக்காது எந்நாளும் சளைக்காது அன்பாலே உருவானதே.... உன் அருகில் நான் அமர்ந்து நீ பறிமாறும் அழகோடு உணவோடு உன்னோடு உட்கொள்ளும் கணம் போதுமே... மரணமும் பின்வாங்குமே...

துளைந்து போனேன் நான்...!

Image
முதல் முறை உன் குரல் கேட்ட.. அந்த நிமிடங்களில்! என்னை மறந்து உன் குரலில் தொலைந்தே போனேன்..! காற்றலை வழி வந்து என் காது வழி வீழ்ந்து உன் குரல் தொடுத்த இனிமையான- அன்பான பண்பான வார்த்தைகள் என்னில் புகுந்து என்னை உனது வசமாக்கியது..! உன் குரல் மட்டும் கேட்காமல் போய் இருந்தால் என் வாழ்வின் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்..! பிரம்மன் படைப்பின் சிறப்பு படைப்பு நீயடா! வர்ணிக்க வார்த்தைகள் தேடி அலையும் பேதை நானடா.! உன் அன்பு சிறையில் சிறைப்பட்டு எனது மனம்! விடுதலை பெற விருப்பமில்லாமல்.. உன்னுடன் இறுதிவரை ஆயுள் கைதியாக வாழ அடம் பிடிக்கிறது...! என் உறவென உனை மாற்றினாய்! விழி வழியே உன் உருவம் நகல் எடுத்து நித்தமும் பார்க்க வைத்தாய்...! மொத்தத்தில்..என் இனியவனே உன்னிடம் அடிமைப்பட்டு வாழ்ந்திட ஏங்குது.. இந்த பெண்ணின் மனம்..
நிறம் மாறும் பொழுதில் நிறைந்திருக்கும் நதியில் கரை நானல் இடுக்கில் சிக்குன்ட நீர் குமிழி நீ ஒரு வார்த்தை வரத்துடிக்கும் உன் அழகை சொல்லிடவே - ஆனால் அண்டமெல்லம் திரண்டு வந்து கண் இரண்டை மறைப்பதேனோ? புள்ளி மான் பொட்டு வைத்து பொழிர் மலர் சோலையென உன் கூந்தல் நறுமணக்க அசைந்தாடும் கொடி போலே சித்திரை தேர் வீதியிலே சிலையென நடந்து வரும் செந்தாமரை பதத்திலே கொலுசொலியும் இசையமைக்க கூர் விழிப் பார்வையாலே என் மனதை குத்திவிட்டு பருவம் வந்த நெற்ப்பயிராய் நிலம் நோக்கி கடந்துசென்றாய் நீ நீ நடத்தும் நாடகத்தில் வட்டத்தின் முனை தேடும் மாணவனாய் படிக்கிறேன் உன் மனதை!!!!!!!!!

கண்ணி என்பேன்...!

Image
காரிகையின் காதலை நம்பி, காத்திருந்தேன் கன காலம்! காணாமல் போய் விட்டாள் - என் காதலை பொய்யாக்கி விட்டு.... காலம் செய்த கோலம் என்று, பொய்யுரைக்க மாட்டேன்...! காதலி செய்த நாடகம் என்று, மெய்யுரைக்கவும் மாட்டேன்...! மாறாக........ என்னோடு வாழ அவளுக்கு.., அதிஷ்டம் இல்லை என்பேன்..! என் புன்னகையின் அழகை, ரசிக்க தெரியாதவள் என்பேன்..! என் கவிதைகள் அவள் மேல் கொண்ட, எண்ணற்ற காதலை புரிந்து கொள்ளாதவள் என்பேன்..! என் ஆண்மையின் மென்மையினை.., உணர முடியாதவள் என்பேன்..! என் குழந்தை உள்ளத்தை..., அறிந்து கொள்ளத்தெரியாதவள் என்பேன்..! கண்ணீர் வடிக்கும் என் இதயத்தை...கூட, கண்டு கொள்ள முடியாத குருடி என்பேன்..! அவள் கன்னி அல்ல,, கன்னி அல்ல... என்னை தாக்க வந்த.... கண்ணி என்பேன் கண்ணி என்பேன்..!!!
Image
கொழுத்து நான் நின்றாலும் உன் கண்ணிற்கு மட்டும் மெலிந்து போனதேனோ கருமை என்று எல்லோருடைய நாவும் என்னை நலம் காணும் போது அள்ளி அனைத்து கிள்ளி உரைக்கும் உன் நாவு எனை அழகுஎன்பதேனோ புசிக்கும் வயிற்ருக்கு பசிக்காவிட்டாலும் படையெடுக்கும் உன் கரம் எனக்காக உணவுதேடுவதேனோ அனலாய்க் காய்ச்சல் வந்தாலும் எனை அணைத்துக்கொண்டு உன் விரல் என் முடிக்கு மகுடி வாசிப்பதேனோ சினம் வந்து தடம் மாறும் உன் குணத்தால் தடம் பாதிக்கும் உன் விரல் என் முதுகில் . வேறு யாரும் எனை முறைக்கும்போது கடிக்கும் பார்வையால் தடிக்கும் வார்த்தையால் எனக்கு கவசமிடுவதேனோ இனம் புரியாத பாசத்தால் இனம் காக்கும் உன் அன்பு இனிப்பதேனோ இனிக்கும் தேனும் உனைப் பற்றி உரைக்கும்போது முடிவாய் வருவதேனோ....... <>பாலமுருகன்<//?

தோழியே.......!

தோழியே! உன்னால் மட்டும் எப்படி முடிந்தது என்னை மறப்பதற்கு முடிந்தால் எனக்கும் சொல்லிவிடு நானும் உன்னை மறப்பதற்கு - இல்லையேல் உன் நினைவுகளினாலேயே மரித்துவிடுவேன் ஆம்! நான் மரிக்கும் வரை உன் நினைவுகள் என்னை விட்டு மறையாது.

மௌனம்

தினம் எத்தனை எத்தனை .... கொஞ்சல்கள் ..... சின்ன சின்ன சிணுங்கல்கள் ...... மெல்லமாய் நடந்து ..... தீராத பாதைகள் ...... நொடிக்கு நொடி பகிர்ந்த ..... சொல்ல முடியாத ..... சோகங்கள் ...... இவை எல்லாம் ...... கேட்டன ???????? நொடி பொழுதாவது !!!! இனி சந்திப்போமா ???????? மௌனம் மட்டுமே ...... மௌனமாய் எட்டி நின்றது !!!!!!!!!

காதல் வந்ததால் :-

பார்க்கும் தூரத்தில் காதலி பரிதவிக்கும் இதயம் பசுமையான அவள் உருவம் பக்கத்தில் இருந்தால்-தினம் அல்லல்படும் மனசு. விக்கலும் இல்லை தாகமுமில்லை தவிப்புக்குள் அடங்கும் ஏக்கம் குற்றம் ஏதும் செய்யாமல் வார்த்தைகள் எல்லாம் மௌனத்திற்கு சிறைபடுகின்றன. விழிமூடித்திறக்கும் இடைவெளியில் காணும் உருவம் உறங்கியபோது உறவாடுகிறது. காதல் வந்ததால் கனவு வந்தது கற்பனை வந்தது கவிதை வந்தது இருப்பதை இழந்துவிட்டு காதலுக்காக காத்திருக்கும் காதலன்…….. ~பாலா

உன் முகம்...!

சில்லென்ற காற்றோடு மெலிதாய் தூறிக்கொண்டிருக்கும் மெல்லிய மழைத்துளிகளை… வாஞ்சையோடு உள்ளங்கைகளில் ஏந்திக்கொண்டிருக்கும் இந்த ஈர நிமிடத்தில் எதேட்சையாய் கவனித்தேன்… என் உள்ளங்கைக்குள் உருள்கின்ற துளிகளில் உன் முகம் தெரிவதை… ~பாலமுருகன்

"மழை"

'கொளுத்தும் கோடையில் சில்லென்ற மழை எப்போதும் பாராது செல்லும் நீ திரும்பி புன்னகைத்தாய் அடாசு ஜோசியர்கள் சொன்ன தினப்பலனும் பலித்தது அருகிலிருந்த குழந்தைக்கு என்னைப் பார்த்துக் கொண்டே கொடுத்தாய் ஒரு முத்தம் குருபெயர்ச்சியோ சனிப்பெயர்ச்சியோ நல்லதாய் நடக்கிறது மெட்ரோ ரயிலுக்கு நான்நிற்கும் இடத்தில் வந்து நீ நின்று கொண்டிருக்கிறாய் இன்றைக்கு நாளைக்கும் நாளை மறுநாளும் இன்னும் சில நாட்களுக்கும் உன் விழிநாடகம் தொடருமென்று புரிகிறது வானிலைஅறிக்கையில் இன்னும் மழை தொடருமென்கிறார்கள்' ~பாலமுருகன்

காகித இதயம்...!

கண்களால் காதல் சொல்லி கைகளால் அதை உறுதிபடுத்தி என் காதை கிள்ளும் காதலி அவன் காதல் பாடல் எழுத காத்திருக்கும் அவள் காகித இதயம் இதயத்தில் எழுதினால் வலிக்கும் என்று இப்போது அவள் விழிகளில் கவிதை எழுத ஆரம்பித்து முற்றுப்புள்ளி வைக்க காத்து கொண்டு இருக்கிறேன் என் கனவில். . . !

என் நினைவுகள்...!

அவள் கை பிடித்த நாள் நான் கால் பதித்த முதல் இடம் "நிலவு" [அவள் மனது] கவிதை இல்லை கனவுகள் மட்டும் அவளை பார்த்த அந்த நாள் முதல் வானவில் வண்ணங்கள் மறைந்து போகும் பெண்ணே உன் புன்னகை என்னில் புதைந்து போகும்...!
அவள் மேடை ஏறி பேசியதில்லை.. ஆனால் பேச தொடங்கினால் ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!! அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்... ஆனால் "அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம் அவளை திரும்பி பார்ப்பார்கள்..!! அவளுக்கு "கவிதை" பிடிக்காது... ஆனால் எல்லா கவிதைக்கும் அவளை பிடிக்கும்..!! அவள் யாரையும் காதலிப்பதில்லை... ஆனால் ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது என்னோடு சேர்த்து..!! அவள் பெயரை..., என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்.. காத்திருங்கள்... அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்.. ஒரு "விருந்தே உண்டு" எல்லாருக்கும்..!!

ஒரு அழகான கனவு...! (உண்மையே)

ஆற்றங்கரையில் அமர்ந்து தனிமையில் நான் அழுதுக் கொண்டிருந்தேன். அப்போது ஆற்றில் ஒரு தேவதை தோன்றினாள். 'ஏன் அழுகிறாய்?' எனக் கேட்டாள். 'என் இதயம் தொலைந்துவிட்டது' என்றேன். 'தேடித் தரட்டுமா?' என்றாள். 'சரி' என்றேன். அந்த தேவதை ஆற்றுக்குள் மூழ்கினாள். சிறிது நேரத்தில் ஆற்று நீரெல்லாம் ரத்தமாக மாறியது. நீரிலிருந்து எழுந்தாள் தேவதை. அவள் கையில் ஒரு இதயம். 'இதுவா?' எனக் கேட்டாள். 'இதுவே தான்' என்றேன். உடனே அந்த தேவதையின் முகம் கோபத்தால் சிவந்தது. 'நீ ஒரு பேராசைக்காரன், திருடன், பிறர் பொருள் மேல் ஆசைப் படுபவன். இது உன் இதயமல்ல, என் இதயம்' என்றது. நான் சொன்னேன்: 'உன் இதயத்தை வெளியே எடுத்துவிட்டு இன்னும் நீ உயிரோடு இருக்கிறாய். உனக்கு தெரியாமல் உனக்காக உனக்குள் இப்போது துடித்துக் கொண்டிருப்பது என் இதயம்.' என்று. இதைக் கேட்டு சிவந்திருந்த அவள் முகம் வெளுத்து விட்டது. 'இதயம் இல்லாமல் தவிக்கும் எனக்கு உன் இதயத்தை கொடுக்க மாட்டாயா?' எனக் கேட்டேன். தேவதை அழுதுவிட்டாள். சிறிதும் தயங்காமல் அழுதுக் கொண்டே அவள் இதயத்தை நீட்டினாள். நான

உன் ஆழகுக்கு...!

உன் புன்னகைக்கு பூக்களை ஒப்பிடலாம். உன் குரலுக்கு குயிலை ஒப்பிடலாம். உன் அறியாமைக்கு குழந்தையை ஒப்பிடலாம். ஆனால், உன் அழகுக்கு எதுவுமே இல்லை ஒப்பிட.
தங்கத்தை கூட ஈர்க்கும் காந்தம் அவள் கண்கள். இப்போது இந்த சிங்கத்தையே சிறை செய்து விட்டது, சட்டமன்றத்திற்கே தெரியாத அவள் இதய சிறைக்குள்.
நீ என்ற ஒரெழுத்தும்..... நான் என்ற ஈரெழுத்தும்.... காதல் என்ற மூவெழுத்தில் சந்தித்தோம்............// மரணம் என்ற நான்கேழுத்தில் பிரிவோமா????.... இல்லை திருமணம் என்ற ஐந்தெழுத்தில் இணைவோமா?????................/

காலம்...!

உயிர் கொடுத்தாள் தாய் .... ஊக்கம் கொடுத்தார் தந்தை..... அறிவளிதார் ஆசான்..... தோள் கொடுத்தான் என் தோழன்.... காலத்திற்கும் கண்ணீரை மட்டும் கொடுத்து சென்றால் என் காதலி....! (பாலா )
சுனாமியாக வந்து என் அணு உலையை சீரழித்தவளே... நான் ஏவிய அணுக்கதிர்கள் எல்லாம் இப்போது உன்னைத்தான் தேடுகின்றன. சரணடைந்து விடு.
மீன்கள் அழுவது கடலுக்கு மட்டும்தான் தெரியும். நான் அழுவது என் வீட்டு சுவர்களுக்கு மட்டும்தான் தெரியும். பெண்ணே! உன்னை பிரிந்ததால் ஏற்பட்ட வேதனைகளை, என் இதய சுவர்கள் மட்டுமே அறியும்.
எதையோ தொலைத்து விட்டது போல இருக்கிறது எனக்கு... எதை தொலைத்தேன் என்று தெரியவில்லை. எதையோ தேட வேண்டும் போல இருக்கிறது எனக்கு... எதை தேட வேண்டும் என்று தெரியவில்லை. உன்னை கேட்டால் தெரியும் என்று சொல்கிறது மனம்.

தோற்று போனேன்....

தோற்று போனேன்.... உன்னை போல் சிரிக்க தெரியாமல், உன்னை போல் நடக்க தெரியாமல், உன்னை போல் அழ தெரியாமல், ...உன்னை போல் ரசிக்க தெரியாமல், உன்னை போல் கோபப்பட தெரியாமல், உன்னை போல் கொஞ்சி பேச தெரியாமல், உன்னை போல் வெட்கப்பட தெரியாமல், அனைத்திலும் தோற்றேன் உன்னிடம், ஒன்றை தவிர... என்னை போல் உனக்கு காதலிக்க தெரியாமல் தோற்று விட்டாயடியே ... -பாலமுருகன்
நினைவின் அணைப்பில் நீ வந்த போது மனதின் பிணைப்பில் தேன் வந்தது உறவின் சுகத்தை நான் கண்ட போது பிறவிப் பயனை தான் தந்தது உலவும் அன்பில் உயிர் நின்ற போது உலகம் என்னுள் தான் வந்தது பழகும் அழகு நீ தந்த போது கடவுள் காட்சி நான் கண்டது

பாலா ~*Feel My LOVE*~

பெண்ணே காதல் தோல்வி கண்டால் இதில் இருந்து மீழ்வது அடுத்த பிறவி எடுப்பதை போன்றது எனக்கு இப்பிறவியே போதும் இன்னொரு பிறவி வேண்டாம் இப்பிறவியில் உன் மீது கொண்ட காதலோடு போகிறேன் இந்த உலகைவிட்டு...! [பாலமுருகன்]
உன் கண்களை ரசிக்கிறேன் .... மழை பெய்தால்தான் பூமி செழிக்கும் ஆனால் நீ என்னை ஒரு முறை பார்த்தாலே நான் செழித்து விடுகிறேன் .... காற்று வீசினால்தான் தென்றல் என்னைதொடும் ஆனால் நீ என்னை பார்க்கும் அந்த ஓரப்பார்வைகளால் தென்றல் இல்லாமலேயே தல்லாடிப்போகிறேன் நான் ....
சொர்க்கத்தையும் நரகத்தையும் ஒன்றாக இணைத்துப் பெயர் சூட்ட வேண்டுமென்றால் - உனது பெயரைத்தான் சூட்ட வேண்டும்...! வாழ்வையும் மரணத்தையும் ஒன்றாகக் காண்பிக்க வேண்டுமென்றால் - உன்னைத் தான் கைநீட்டிக் காட்ட வேண்டும்...!
நிலவொளியின் நதிக்கரையில் குளிர் காற்றின் பொதுக்கூட்டத்தில் உன் விரல் தொட்ட வினாடியில் உயிருக்குள் பறந்த பறவை சொன்னது எனக்குள் காதல் கூடாரமடித்திருப்பதை.

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!

நீ சொல்லும் சொல்லை உடனே கேட்க்கும் பேதை ஆண் நான்!!!உன் சொல் தட்டாதவன் என்பதை விட உன்மீது அளவில்லா அன்பு கொண்ட பாசப்பைத்தியமடி நான் ........ உந்தன் அன்பு என்னை ஆழும் அந்த இறுதி நொடி வரை உள்ளுக்குள் அழுதாலும் வெளியே சிரித்தமுகத்துடனேயே இருப்பேன் என்னுள் நீ வாழ்வதால் ...... காலமெல்லாம் காத்திருப்பேன் ஒரு நாள் வருவாய் என்று ......இத்தனை நாள் பிரிவின் துன்பத்திற்கு இறைவனிடம் கேட்பது ஒன்று தான் .......உன்னை பார்த்த அந்த நாள் என் ஆயுளின் இறுதி நாளாக வேண்டும் ........ நீ இல்லா வாழ்க்கை இனித்திடுமா? அப்புறம் ஏன் வாழ்கிறேன் என்று பார்கிறாயா? உன்னை காணவே ..... உன்னை காணாது எந்தன் உடல் தீயில் இட்டாலும் வேகாது .......... நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...! பாலமுருகன்.

நினைவுகள்

முகம் பார்க்கும் போது மட்டும் வரும் நினைவுகள் முகவரி இல்லாமல் போய்விடும்... இதயம் பார்த்து வரும் நினைவுகள் இறுதி வரை நிலைத்திருக்கும்..... <=======பாலமுருகன்=======>
கண்மூடி யோசிக்கிறேன் காலங்களின் மாற்றத்தில் நம் வாழ்க்கையும் மாறித்தான் பொய் இருக்கிறது ஒய்யாரமாய் நாம் நடந்து போகும் ஒற்றையடி பாதையில் டிராபிக் போலீஸ் போல் நின்ற அந்த பனை மரம் கொஞ்சம் வாடி போய் இருக்கிறது வா நாம் வந்து இருக்கிறோம் என்று சொல்வோம் அது வசந்த புன்னகை பூத்து விடும் கண் ரத்தமாய் மாறினாலும் கரை ஏற மனது இல்லாமல் ஆட்டம் போட்ட அந்த கம்மாய் குளம் கொஞ்சம் உடம்பை குறைத்து இருக்கிறது இங்கேயும் வந்து விட்டார்களா பட்டணத்தார்கள் விலை நிலத்தையும் கூட விட்டு வைக்காதவர்கள் இதை மட்டுமா விட்டு விடுவார்கள் நண்பா.... பட்டணத்து வாழ்க்கையில் பக்கத்து வீட்டு நபர்கள் கூட யார் என்று தெரியாமல் போர் அடித்து விட்டது பார்த்து சிரிக்க கூட பைசா கேட்பார்கள் போல கிராமத்து வாழ்க்கையில் சிட்டு குருவி போல் பரந்த நாம் இன்று மாட்டி கொண்டோம் இயந்திரமான வாழ்க்கையில் யாரை குறை சொல்ல .... எப்போவது நம் கிராமத்திற்கு வரும் போது எல்லாம் தாயின் மடியில் படுத்து உறங்கின சுகம் ... நம் நட்பின் சுவடுகளை சுமந்து கொண்டு அலையும் நம் கிராமம் என்றும் அழியாது நம் நினைவை விட்டு நம் நட்பை போல் நீங்காத உறவாய் இன்றும் என்றும்

தனிமை...!

நீ+நான் = முடிவில்லா மனயுத்தம் நான்+நான் = சுயமழித்து திரிதல். கர்த்தன்+புத்தன் = போதிமர சிலுவைகள் கோபம்+பிடிவாதம் = உடைந்த கண்ணாடிக்காதல் நேசம்+பாசம் = வறண்ட ஏரியில் துடிக்கும் நினைவுமீன்கள் ஆத்மா+நாம் = உயிர் துறந்த உடல்கூடு கடைசியாக, தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள் பாலமுருகன்
உன் பார்வையால் கவிதை எழுதின பலர் தன்னை தான் புலம்பி தாடியோடு அழைகிறார்கள் என்னையாவது விட்டு விடு எனக்கு மீசை கூட வளராத வயதில் என்னால் தாடி வளர்க்க முடியாது .....

I....LOVE..YOU...I......LOVE....YOU.....SOOOO ....MUCH...

I....LOVE..YOU...I......LOVE....YOU.....SOOOO ....MUCH... ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் நீ எனது பக்கத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.. அது உனக்கு தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன்... எவ்வளவு காதலை எனக்குள் வைத்திருக்கிறேன் உனக்காக... முடியவில்லை....... I ... LOVE .... YOU ...... நான் காத்திருக்கிறேன் எப்போதும் உனக்காக.... ஒவ்வொரு நாளும் மெதுவாக போகின்றது... நீ என்னருகே இல்லாததால்.. என் வாழ்வை தனிமையில் கழிக்கிறேன்...உனக்காக.. வீடு திரும்பும் பறவை போல.. உன் நினைவுகளுடன் காத்திருக்கிறேன் உனக்காக..... நீ வருவேன் என்று சொல்.... நீ என் உயிரிலும் உடலிலும் கலந்திருக்கிறாய்..... நித்தமும் உனக்கான காதல் என்னுள் வானளாவ வளர்ந்து கொண்டே இருக்கிறது... எப்போதாவது உன்னை நான் பார்த்து உன் கண்களை பார்த்து நான் சொல்ல வேண்டும்I LOVE......YOU.... I....LOVE YOU..... I ...LOVE...YOU SO......... MUCH..... - பாலமுருகன்

என் காதல்

உன் சிரிப்புகள் என்னை குருடனாக்கின... பாவம், உனக்கு அந்த முத்துகளை கூட பாதுகாக்க தெரியவில்லையடி... மறந்து போய் தொலைத்து விட்டேனடி என் இதயத்தை.... உன் முத்துக்களுக்கு விலையாக.. அதை வாங்க மறுத்து விடாதே .. இறந்து விடும் உன்னை விட்டு பிரிவதனால்..... ~ பாலமுருகன்
சண்டையில் தோன்றிய சந்திப்பு, சமாதானத்தில் முடிந்த சண்டை ........ அதனால் பூத்த நட்பு நட்பாய் நீ சொல்லிய கவிதை, உன் கவிதையில் நான் கண்ட பாசம் பாசமாய் நீ ஊட்டிய சோறு அழகாய் சிரிக்கும் உன் முகம் உன் முகம் பார்த்து கவலை மறக்கும் நான், நான் தவறிழிக்கையில்.. தெளிவாய் நீ கூறிய அறிவுரை உன் அறிவுரை கேட்டு வெற்றி பெற்ற நான், பாசமாய் நீ கொட்டிய கொட்டு உன் கொஞ்சல் வார்த்தை கேட்க பாசாங்கை அழுத நான்! இவை அனைத்தும் என்றும் அழியா சுவடுகளாய் .......... என்றும் பதிந்திருக்கும், என் மனதில் நீ ......... என்னை மறந்து போன பின்பும்.! ---------பாலா-----------------

காதல்...! காதல்...! காதல்....!

கனவிலோடும் கடவுளை கண்டிட வேண்டும்- நாம் பிரியாவரமொன்றை வாங்கிட வேண்டும்! விழியோரம் வழிகின்ற நீராக வேண்டும் - உன் மடி மீது தானே- என் மரணம் வேண்டும்! யாரோடு வாழ்ந்தாலும் - நீ நலம் வாழ வேண்டும் என் நினைவாக ஜென்மங்கள் எல்லாம் நீயே வேண்டும்! இவ் ஜென்மம் நம் உறவு பிரிந்திட நேர்ந்தாலும் - மறு ஜென்மம் உன் மகனாய் பிறந்திட வேண்டும்! தாயாய் நீ என்னை தாலாட்ட வேண்டும் சேயாய் உன்மடியில் - நான் தூங்கிட வேண்டும்! செல்ல குறும்புகள் -நான் செய்ய வேண்டும் சிரித்தபடி நீ என்னை அணைத்திட வேண்டும்! தவறுகள் நான் செய்தால் நீ தண்டிக்க வேண்டும்- நீ தண்டித்து நான் அழுதால் அன்பாய் தலை கோத வேண்டும்! தாய் உறவாக ஜென்மங்கள் - நீ வாழ வேண்டும் - சேய் உறவாக உன் மடியில் உயிர் போக வேண்டும்! வயதாகி விட்டால் இரு கை சுமந்து குளிப்பாட்ட வேண்டும் - உனை துவட்டி கூறை கட்டி அழகு பார்க்க வேண்டும்! கவிஞர்கள் நம் அன்பை கவிபாட வேண்டும் காலங்கள் நம் உறவை கதையாக்க வேண்டும்! இது என்ன உறவென்று நான் கேட்க வேண்டும் - போன ஜென்மத்து உறவென்று நீ சொல்ல வேண்டும். ^^^^^பாலமுருகன்^^^^^

உன் கண்களுக்கு மட்டும் தெரியும்

Image
என் மனதில் வசிப்பவளே என் மனம் அழுவது கூடவா உன் செவிகளுக்கு கேட்கவில்லை???... என்றாவது ஒரு நாள் என்னை நீ புரிந்து கொள்வாய் அன்று நான் உன் கண்களுக்கு மட்டும் தெரியும் நட்சத்திரமாக வானிலே வசிப்பேன்...! * * * < பாலா > ~ <> * * *

உன் காதல் வேண்டாம் பெண்ணே........!

Image
உன் காதல் வேண்டாம் பெண்ணே........! பெண் ; உன்னைப் பார்த்த சில நொடியில் என்னை மறந்து உன்னுள் தொலைந்தேன் நானடா மீண்டும் மீண்டும் உன்னை பார்த்திட ஏனோ என் கண்கள் துடிக்குதே காதலும் நீயே எந்தன் வாழ்வும் நீயே என்று என் இதயம் இதயம் ஏனோ சொல்கிறதே என் உணர்வினில் கலந்து உயிரினில் மிதந்து நினைவினில் துளிர்த்து என் காதலில் பிறந்தவனே என் காதல் புரியவில்லையா? அறிந்தும் அறியாதவனே புரிந்தும் புரியாதவனே புலம்புகின்றேன் புரியவில்லையா? எந்தன் காதல் உனக்கு தெரியவில்லையா? ஆண் ; அறிந்தேன் பெண்ணே அறிந்தேன் புரிந்தேன் கண்ணே புரிந்தேன் புலம்ப வேண்டாம் பெண்ணே உந்தன் காதல் வேண்டாம் கண்ணே வரும் காலம் யாவும் கண்ணீர் துளிகள் வரவாகுமே துன்பங்கள் தொடராகுமே இன்பங்கள் தொலைவாகுமே உன் காதல் சில நாளில் தேய் பிறையாகி போகுமே என் காதலும் வேண்டாம் பெண்ணே உன் காதலும் வேண்டாம் கண்ணே... * * * * ~ [ பாலமுருகன் ] ~ * * * *

$ Fell My LOVE $

Image
எனக்குள் இருக்கும் உன்னையே உன்னால் புரிந்து கொள்ள முடியாத போது! ...உனக்குள் இருக்கும் என்னை எப்படியடி புரிந்து கொள்வாய்........ $ Fell My LOVE $

நினைவுகள்

Image
எனது வெள்ளை காகிதங்களில் கவிதைகளை நிரப்புவது உன் நினைவுகள் மட்டுமே வெறும் உறவென்றால் மறந்து விடுவேன் என் உயிர் துடிப்பதை எவ்விதம் மறப்பேன்?? பிரிவு அது என்றுமே நம்மில் தோற்று போகும் உன்னை நிழலாய் தொடர நினைக்கும் என் நட்பு உன் இதயம் தன்னில் மறைந்து கொண்ட சோகங்களை தோண்டி எடுத்து என்னுள் புதைத்து கொள்ள விரும்புகிறது நான் பார்க்க நீயாவது புன்னகை அணிந்து கொள் ...!!! பிரிவுக்காலம் எப்போதும் அதில் உன் நினைவுகளின் துணை கொண்டு சிரித்துகொள்கிறேன் இல்லை என்றால் சிரிக்கவே மறந்திருப்பேன் எனக்குள் வாழ்ந்து கொண்டு எனக்காய் துடிக்கும் உனது நட்பின் ஆழம் கண்டு கண்ணீர் வடிக்கிறேன் என் அருகில் நீ இல்லை என..!

இதோ எனது கிறுக்கல்களில் சில ........

Image
1. கவிதைகள் எழுதிய அனுபவங்கள் இல்லை அனால் இன்று..... நான் எழுதுபவை அனைத்தும் கவிதைகளாகின்றது என்னவளால் !!! 2. நம் வாழ்வில் நம் காதல் வாழ்வதும் என் மரணத்தில் என் காதல் வாழ்வதும் உன் கையில்..... 3. உயிர் அடங்கும் அந்த நாளில் நினைவுகள் அடங்கிவிடும்.... நினைவுகள் அடங்கும் அதே நாளில் உன் நினைவும் அடங்கிவிடுமென்று நினைக்கும் போதுதான் அன்பே......... நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற ஆசையே வருகிறது!!!!!!!! 4. இந்த பேனா எழுதிய முதல் வார்த்தை - உன் பெயர் இப்பொழுது நன்றாக பார்... உன் பெயர் எவ்வளவு அழகாக தெரிகிறது! அதைவிட ஒரு ஆச்சர்யம்!! முன்பு இருந்ததை விட அழகாகிவிட்டது உன் பெயர் எழுதிய என் பேனா !!!! 5. அன்பே, எனக்கு மட்டுமல்ல... என் வீட்டு கடிகாரத்திற்கும் என்ன ஆனதென்று தெரியவில்லை நீ இருக்கும் போதுமட்டும் மிக வேகமாய் சுற்றுகிறதே!!! 6. ஆயிரம் இழப்புகள்.... ஆயிரம் தோல்விகள்..... ஆயிரம் ஆயிரம் வலிகள் இருந்தாலும் நான் நானகவே பிறக்க விரும்புகிறேன் என்னவளின் அன்புக்காக !!!!! 7. காதல்.... இந்த வார்த்தையை பலபேர் வெறுக்கிறார்கள்.... என்னவள் என்மீது வைத்திருக்கும் காதலை பாருங்கள்.... அந்த வார்த்தையை மட்டும

நீ ...!

Image
நீ சூரியன் அல்ல நலவு..... உன் கண்கள் எரி கற்கள் அல்ல நட்சததிரங்கள்...... உன் புன்னகை வஞ்சகம் அல்ல அன்பு..... உன் கைகள் பூ அல்ல பூ மொட்டு..... உன் பாதங்கள் தேய்பிறை அல்ல வளர்பிறை இவை எல்லாம் தெரிந்த எனக்கு உன் காதல் புரியவில்லையே....!... ^^^^^^^^பாலமுருகன்^^^^^^^

காதலித்து பார் ... !

Image
காதலித்து பார், உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும், உலகம் அர்த்தப்படும் இராத்திரியின் நீளம் விளங்கும், உனக்கும் கவிதை வரும், கையெழுத்து அழகாகும், தபால்காரன் தெய்வம் ஆவான், உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும் கண்ணிரண்டும் ஒலி கொள்ளும் காதலித்து பார்... தலையனையை நனைப்பாய் மூன்று முறை பல் துலக்குவாய் காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய் வந்துவிட்டால் வருஷங்க்ள் நிமிஷங்கள் என்பாய் காக்கை கூட உன்னை கவனிக்காது ஆனால் இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் உணர்வாய் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருள காண்பாய் இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம் காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் காதலித்து பார்... இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும் நிசத்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும் உன் நரம்பே நாண் ஏற்றி, உனக்குள்ளே அம்பு விடும் காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும் ஆர்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும் உதடுகள் மட்டும் சகாராவாகும் தாகங்கள் சமுத்திரமாகும் பிறகு கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும் காதலித்து பார்... பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன

பெண்ணின் கண்கள்

Image
பெண்ணின் கண்களை படைத்தான்... அதில் காந்தத்தை வைத்தான்... ஆணை படைத்தான் அவர்களின் இதயம் இரும்பென வைத்தான்.. பெண்களின் கண்கள் தூண்டில்... ஆண்களின் இதயம் அதில் மீன்கள்... நம் விழி மூடினால் உலகம் இருளும்.. பெண்கள் விழி திறந்தாலோ ஆண்களின் உலகம் மட்டும் இருளும்... பெண்களின் கண்கள் அகல் விளக்கு... வெளிச்சமும் தரும்... விட்டில் பூச்சியாய் நம்மை வீழ்த்தவும் செய்யும்... ஆணினமே எச்சரிக்கை..!!! எதில் வீழ்ந்தாலும் மீளலாம்... பெண்களின் கண்களை தவிர...!! <=====பாலமுருகன்=====>

<===மௌனம்===>

<===மௌனம்===> 1. இன்பமான நேரங்களில் மௌனம் 2. உண்மையானவர்கள் பிரியும் போது மௌனம் 3. நட்பில் மௌனம் 4. காதலில் மௌனம் 5. தோல்வியில் மௌனம் 6. வெற்றியில் மௌனம் 7. இறுதியில் மௌனம்

நினைவுகள். . . !

உயிர் அடங்கும் அந்த நாளில் நினைவுகள் அடங்கிவிடும்.... நினைவுகள் அடங்கும் அதே நாளில் உன் நினைவும் அடங்கிவிடுமென்று நினைக்கும் போதுதான் அன்பே......... நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற ஆசையே வருகிறது!!!!!!! பாலா

It's My Real Feeling :-

It's My Feeling :- By, பாலமுருகன் முதல் இருந்த உண்மை காதல் இப்போது உன்னிடம் இல்லை. என்னை மறந்த உன் இதயத்தை காணும் வலிமை என்னிடம் இல்லை. சுடர்கின்ற சூரியனை போல் சுடேரிதாயே:( பாவியான என் காதலை நீ சந்தேகிதையே:( உணகென்று இருக்கிற என்னை மறந்து போனாயே! கண்களில் நீர் சூழ கலங்கி நின்றேனே! உணர்வற்ற உன் வார்த்தைகளால் உருகுளைந்தேனே.. நீ தான் பேசுகிறாய என்றெண்ணி உடைந்து போனேனே.. உன் அன்பை காதலை உண்மை என நம்பி நின்றவன் நானே... அது உண்மை அல்ல என்றுணர்ந்தும் நிற்கிறேன் நானே .. இருக்கும் வரை என் காதல் உண்மை இல்லை என வஞ்சிதாயே ... இறந்த பின் கெஞ்சினாலும் என் காதலுக்கு உருவம் இருக்காதே ... உண்மை காதல் என்றுணர்த்த என்னிடம் எதுவும் இல்லையே என் அன்பை காட்டிலும் உயர்ந்த உணர்வு எதுவும் இல்லையே காதலிக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதுமா? உண்மை காதல் இது வென்று உனக்கு சொன்னால் புரியுமா? எதனை முறை பிரிந்தாலும் காதல் சாகுமா? எக்காலம் புரிந்து கொள்வாய்?காதிருபேனே... என் காதல் நிஜமென்று புரியும் ஒருநாள்.... அதற்குள் என் இட

*உன் விழி என்னுள்*

கடலும் என் உடலும் உயிரோடுதான் இருக்கிறது. கடலை பார்த்தால் வெறும் தண்ணீர் மட்டுமே தெரியும். மூழ்கி பார்த்தால மட்டுமே மீன்கள் தெரியும். அதுபோல, என் உடலுக்குள் ஓடும் நினைவுக்குள் நீந்துவது, உன் விழி மீன்கள்தான். உன் இமைச் சிமிட்டலில்தான் நகர்கிறது என் நொடி முள். கரையோடு அலைகள் முடிந்து விடுவதில்லை, பூக்களோடு தாவரம் முடிந்து விடுவதில்லை, கனவுகளோடு வாழ்க்கை கலைந்து விடுவதில்லை. <======== பாலமுருகன் =========>

உன் நினைவாள்...!

இமைகளை மூடினேன். தூக்கம் வரவில்லை. கனவுகளின் கதவுகளை மூடினேன். தாழ் போட முடியவில்லை. கதவு திறந்து நுழைகிறாய். சிரிக்கிறாய், பேசுகிறாய், சித்ரவதை செய்கிறாய். இரவில் மட்டும் உயிரோடு தூங்குகிறேன். பகலில் பிணமாக அலைகிறேன். ~ பாலா ~

காதலால் வந்த வலி

காதலால் வந்த வலி பொல்லாதக் காதலால் வந்த வலியினை வெளியில் சொல்லவும் முடியவில்லை.... சொல்லாமலிருக்கவும் முடியவில்லை.... வாய்விட்டு அழவும் முடியவில்லை.... அழாமல் இருக்கவும் முடியவில்லை..... ஆனால் என் மனம் எப்போதும் அழுது கொண்டேதான் இருக்கிறது......

LOVE NEVER FAILS

Image
காதல் போர்.... நண்பர் கூட்டம் சூழ்ந்த போது நேரம் போகவில்லை தனியே உன்னை நினைக்கும்போது நேரம் போதவில்லை விழியில் விழுந்த மின்னல் போல வழியில் வந்து சென்றாய் என் இரவின் தூக்கம் முழுதாய் பறித்து கனவை தந்து போனாய் பூக்கள் ஏந்தி காத்திருப்பேன் நீ காதல் தரும் வரை காதலின்றி போர் தொடுப்பேன் இந்த மண்ணில் வீழும் வரை....

நம் காதல்

Image
நீயும்நானும் வளர்த்த காதலை விட ,,,,,,,,,,,,,,, நம் கோபங்கள் நமக்குள் வளர்த்த காதல் தான் அதிகம்............. என்னில் உன்னையும் .......................... ., உன்னில் என்னையும்................. .................. , பிரதிபலிக்கும் கண்ணாடி - கோபம்!! பாலமுருகன்
இதயம் கூட ஒரு வகையில் பூமி தான் எப்போதும் உன்னையும் உன் நினைவுகளையும் ...சுற்றிக் கொண்டே இருப்பதால் ~ பாலமுருகன் (Sweet Hearter)

My Feelings

அன்பே என் இதயக் கோவிலில் உன் அழகிய காலடிகளைப் பதிக்க எண்ணினேன் எப்போதாவது உனக்கு நேரமிருந்தால் வந்து பார்! என் கல்லறையை உன் பார்வை தான் என் மீது விழவில்லை உன் நிழலாவது என் மீது விழட்டும்............!!!!!!!!!

காதல். . . !

உலகில் பல லட்சம் பூக்கள் உள்ளன. அதில் சில பூக்களுக்குதான் பெயர் உண்டு. பல பூக்களுக்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை. நம் காதல் இன்னும் ஜெயிக்காததால். <======பாலா======>