"மழை"

'கொளுத்தும் கோடையில்
சில்லென்ற மழை
எப்போதும் பாராது செல்லும்
நீ
திரும்பி புன்னகைத்தாய்

அடாசு ஜோசியர்கள்
சொன்ன
தினப்பலனும் பலித்தது
அருகிலிருந்த குழந்தைக்கு
என்னைப் பார்த்துக் கொண்டே
கொடுத்தாய்
ஒரு முத்தம்

குருபெயர்ச்சியோ சனிப்பெயர்ச்சியோ
நல்லதாய் நடக்கிறது
மெட்ரோ ரயிலுக்கு
நான்நிற்கும் இடத்தில் வந்து
நீ நின்று கொண்டிருக்கிறாய்
இன்றைக்கு

நாளைக்கும் நாளை மறுநாளும்
இன்னும்
சில நாட்களுக்கும்
உன் விழிநாடகம்
தொடருமென்று புரிகிறது
வானிலைஅறிக்கையில்
இன்னும்
மழை தொடருமென்கிறார்கள்'

~பாலமுருகன்

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!