உன் முகம்...!

சில்லென்ற காற்றோடு
மெலிதாய் தூறிக்கொண்டிருக்கும்
மெல்லிய மழைத்துளிகளை…

வாஞ்சையோடு உள்ளங்கைகளில்
ஏந்திக்கொண்டிருக்கும்
இந்த ஈர நிமிடத்தில்
எதேட்சையாய் கவனித்தேன்…

என் உள்ளங்கைக்குள்
உருள்கின்ற துளிகளில்
உன் முகம் தெரிவதை…

~பாலமுருகன்

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!