பெண்ணின் கண்கள்


பெண்ணின் கண்களை படைத்தான்...
அதில் காந்தத்தை வைத்தான்...
ஆணை படைத்தான்
அவர்களின் இதயம் இரும்பென வைத்தான்..
பெண்களின் கண்கள்
தூண்டில்...
ஆண்களின் இதயம் அதில் மீன்கள்...
நம் விழி மூடினால் உலகம் இருளும்..
பெண்கள் விழி திறந்தாலோ ஆண்களின் உலகம் மட்டும் இருளும்...
பெண்களின் கண்கள் அகல் விளக்கு...
வெளிச்சமும் தரும்...
விட்டில் பூச்சியாய் நம்மை வீழ்த்தவும் செய்யும்...
ஆணினமே எச்சரிக்கை..!!!
எதில் வீழ்ந்தாலும் மீளலாம்...
பெண்களின் கண்களை தவிர...!!

<=====பாலமுருகன்=====>

Comments

Post a Comment

Popular posts from this blog

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!