கொழுத்து நான் நின்றாலும்
உன் கண்ணிற்கு மட்டும்
மெலிந்து போனதேனோ
கருமை என்று எல்லோருடைய
நாவும் என்னை நலம்
காணும் போது
அள்ளி அனைத்து
கிள்ளி உரைக்கும்
உன் நாவு எனை
அழகுஎன்பதேனோ
புசிக்கும் வயிற்ருக்கு
பசிக்காவிட்டாலும்
படையெடுக்கும் உன் கரம்
எனக்காக உணவுதேடுவதேனோ
அனலாய்க் காய்ச்சல்
வந்தாலும் எனை
அணைத்துக்கொண்டு
உன் விரல் என் முடிக்கு
மகுடி வாசிப்பதேனோ
சினம் வந்து தடம் மாறும்
உன் குணத்தால்
தடம் பாதிக்கும் உன் விரல்
என் முதுகில்
.
வேறு யாரும் எனை
முறைக்கும்போது
கடிக்கும் பார்வையால்
தடிக்கும் வார்த்தையால்
எனக்கு கவசமிடுவதேனோ
இனம் புரியாத பாசத்தால்
இனம் காக்கும் உன் அன்பு
இனிப்பதேனோ
இனிக்கும் தேனும்
உனைப் பற்றி உரைக்கும்போது
முடிவாய் வருவதேனோ.......
<>பாலமுருகன்<//?
Comments
Post a Comment