*உன் விழி என்னுள்*

கடலும் என் உடலும்
உயிரோடுதான் இருக்கிறது.

கடலை பார்த்தால்
வெறும் தண்ணீர் மட்டுமே தெரியும்.
மூழ்கி பார்த்தால மட்டுமே
மீன்கள் தெரியும்.

அதுபோல,
என் உடலுக்குள்
ஓடும் நினைவுக்குள்
நீந்துவது,
உன் விழி மீன்கள்தான்.

உன் இமைச் சிமிட்டலில்தான்
நகர்கிறது
என் நொடி முள்.

கரையோடு அலைகள் முடிந்து விடுவதில்லை,
பூக்களோடு தாவரம் முடிந்து விடுவதில்லை,
கனவுகளோடு வாழ்க்கை கலைந்து விடுவதில்லை.

<======== பாலமுருகன் =========>

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!