எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னை அல்ல
என் கவிதைகளை என்று.
ஆனால் உனக்குத் தெரியுமா?
உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல
நான் தான் என்று..
தபால்காரனுக்குக் கூட என் மீது
இறக்கம் இருக்கிறது.
எவர் வீட்டுக் கடிதத்தையாவது
என் வீட்டில் போட்டு
தற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான்.
நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய்.
எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுதத் தொடங்காமல்........
எழுது எழுது..
எனக்கொரு கடிதம் எழுது..
என்னை நேசிக்கிறாய் என்றல்ல.
நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்று....
~பாலமுருகன்
நீ விரும்புவது என்னை அல்ல
என் கவிதைகளை என்று.
ஆனால் உனக்குத் தெரியுமா?
உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல
நான் தான் என்று..
தபால்காரனுக்குக் கூட என் மீது
இறக்கம் இருக்கிறது.
எவர் வீட்டுக் கடிதத்தையாவது
என் வீட்டில் போட்டு
தற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான்.
நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய்.
எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுதத் தொடங்காமல்........
எழுது எழுது..
எனக்கொரு கடிதம் எழுது..
என்னை நேசிக்கிறாய் என்றல்ல.
நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்று....
~பாலமுருகன்
Comments
Post a Comment