உன் நினைவாள்...!

அன்பாய் கரம் பிடித்து
மடியில் தலை சாய்த்து
நீ முடி கோதும் போதினிலே
உன் மொழி கேட்டு என் மொழி வாழ
நம் உரையாடும் விளையாடல்
மனம் காணும் ஓர் சுக நாடலே

உன் முகம் காணும் கண நேரம்
மனம் காணும் இதம் போதுமே...

குழல் சூட நல் மலர் கொண்டு
தினம் வந்து என் கரம் கொண்டு
நான் சுடும் வரம் வேண்டுமே...

உன் கரம் பற்றி நிலவோடு
நடை போடும் சுகம் போதும்
அகிலங்கள் துசாகுமே...

விழியோடு விழி பேசும்
மொழி காண மனம் நாளும்
இனம் காணா தவிப்பாகும்
இதை எழுத இயலாததே...

உன் கோபம் நான் தணிக்க
என் கோபம் நீ தணிக்க
இது ஊடல் இளைக்காது
எந்நாளும் சளைக்காது
அன்பாலே உருவானதே....

உன் அருகில் நான் அமர்ந்து
நீ பறிமாறும் அழகோடு
உணவோடு உன்னோடு
உட்கொள்ளும் கணம் போதுமே...
மரணமும் பின்வாங்குமே...

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!