Just Feel it :-

நாள் முழுக்க பேசிக்கொண்டு
பக்கத்திலேயே இருந்த பிறகும்
விடைபெறும் சமயத்தில்
என் கைகைளை இறுகப் பற்றிக்கொள்வாயே…

அந்த ஒருநொடியில்
ஒட்டுமொத்தமாய் கரைந்துபோனது
இதுவரை கடந்த
அத்தனை நிமிடங்களும் !

இன்னும் கொஞ்சநேரம்
இப்படியே கையை பற்றிக்கொண்டு இருப்பாயா
என மனம் ஏங்கினாலும்…

“சரி நேரமாயிடுச்சு கிளம்பட்டுமா… “
என கேட்கும்
என் பொய்யான உதடுகளை என்ன செய்ய !

~பாலமுருகன்

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!