Posts

காதல். . . !

உலகில் பல லட்சம் பூக்கள் உள்ளன. அதில் சில பூக்களுக்குதான் பெயர் உண்டு. பல பூக்களுக்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை. நம் காதல் இன்னும் ஜெயிக்காததால். <======பாலா======>

என் காதல் . . . !

என் காதல் :- உனக்கு நானும் எனக்கு நீயும்... என்னவாய் இருக்கிறோம்... நீ சொன்ன... பிரிந்தே கிடக்கும் கதவுகளைப் போலவா காத்திருப்போடு. அமாவாசையாய்... பெளர்ணமியாய்... வருகிறாய் போகிறாய் மெளனத்துள் முடங்கியபடி... அமுங்கிபோன கேள்விகள் பதில்களுடன் மெளனமாய் நானும்... இருண்ட மேகங்கள் இடி முழக்கத்தோடு... மழை இன்னும் இல்லை என் மன நிலை போல பார்வைக்காக காத்திருக்கிறேன் விழி தர மறுக்கிறாய்... உயிருக்காக காத்திருக்கிறேன் சுவாசம் தர மறுக்கிறாய்... பனி படர்ந்த தேசத்தில் மணிக்கூட்டுச் சத்தம் மட்டும் மெளனம் கலைத்த படி... சூரியனின் வருகைக்காக காத்திருக்கிறேன் சிறு புல்லாய்... பேசு... நீ... முதலில் நிறையப் பேசு தெளிவுகள் பிறக்கும் பேசிப் பேசியுமே... தீர்க்கப்படாத... தீராத தெளிவுகள் எத்தனையோ என் நாட்டு அரசியலாய்... அன்பே... பரந்த தேசததில் அன்பும் உன் கையில் ஆயுதமும் உன் கையில் எதை விட்டெறிகிறாயோ அதுவாய் உன் கையில்...அது உன்னோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்... நெஞ்சு முட்டி நிறைகிறது உன் நினைவுச் சிதறல்கள்... நன்றி சொல்லி... மறக்கவா உன் ரசிகையானேன்... அ
இதயம் என்னும் தோட்டத்தில் காதல் எனும் பயிர் வளர்த்தேன்...! பயிரும் செழிப்பானது என் இதய கண்ணீரில்...!
என்னவளே! உன் வரவுக்காக தினம் தினம் காத்திருக்கும் - எனக்கு உன் வரவுதான் வேண்டாம்... -ஆனால் உன் வார்த்தையையாவது தர இயலாதா?
இதயம் என்னும் கூட்டில் சிறிதாக அவள் பரிசங்களை சிறைப்படுத்தினேன்...! அவளே என் இதயம் என்பது தெரியாமல்...!
என்னிடம் பேசுவதற்காக யோசித்து வைத்திருந்த அத்தனை வார்த்தைகளையும் மறந்து… உடலுக்குள் மெல்லிய நடுக்கம் பிறக்க… உயிருக்குள் சில்லென்று புயல் அடிக்க… இதயம் நான்கு மடங்காய் துடிக்க… என்ன செய்வதென தெரியாமல்… ஒரு சுகமான பதற்றத்தோடு எனக்கு முன்னால் வந்து நிற்கிறாய் நமக்கான முதல் சந்திப்பில்…
Image
உண்மை சொல்ல கண்கள்..! பொய் சொல்ல பெண்கள்...! அதை நம்ப ஆண்கள்..! உண்மை சொன்ன கண்கள் சிறை அறையில்...! பொய் சொன்ன பெண்கள் மணவறையில்....! நம்பிய ஆண்கள் கல்லறையில்........!!!!!