காதல் வந்ததால் :-

பார்க்கும் தூரத்தில் காதலி
பரிதவிக்கும் இதயம்
பசுமையான அவள் உருவம்
பக்கத்தில் இருந்தால்-தினம்
அல்லல்படும் மனசு.

விக்கலும் இல்லை தாகமுமில்லை
தவிப்புக்குள் அடங்கும் ஏக்கம்
குற்றம் ஏதும் செய்யாமல்
வார்த்தைகள் எல்லாம்
மௌனத்திற்கு சிறைபடுகின்றன.

விழிமூடித்திறக்கும் இடைவெளியில்
காணும் உருவம்
உறங்கியபோது உறவாடுகிறது.

காதல் வந்ததால்
கனவு வந்தது
கற்பனை வந்தது
கவிதை வந்தது
இருப்பதை இழந்துவிட்டு
காதலுக்காக காத்திருக்கும் காதலன்……..

~பாலா

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!