உன் நினைவாள்...!

இமைகளை மூடினேன்.
தூக்கம் வரவில்லை.

கனவுகளின் கதவுகளை மூடினேன்.
தாழ் போட முடியவில்லை.

கதவு திறந்து நுழைகிறாய்.

சிரிக்கிறாய்,
பேசுகிறாய்,
சித்ரவதை செய்கிறாய்.

இரவில் மட்டும்
உயிரோடு தூங்குகிறேன்.
பகலில்
பிணமாக அலைகிறேன்.

~ பாலா ~

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!